இருவர் கைதுpt desk
குற்றம்
சென்னை | வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது
திருவல்லிக்கேணி பகுதியில் சட்ட விரோதமாக வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் இ-சிகரெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
திருவல்லிக்கேணி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருவல்லிக்கேணி, தாயார் சாகிப் தெருவில் உள்ள மேன்சன் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் இ-சிகரெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரவாப் (35), முகம்மது அஸ்வர் (44) ஆகிய இருவரை கைது செய்தனர்.
arrestPT DESK
இதையடுத்து அவர்களிடம் இருந்து 14,900 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் 37 இ-சிகரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.