மருத்துவத் துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை, மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களுக்கும், கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அந்த வகையில், கொரோனா நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த, தஞ்சாவூர் மாவட்டம் வில்லியவரம்பல் ஊராட்சியை சேர்ந்த தூய்மை காவலர் மௌனதாஸ் மற்றும் விருதுநகர் மாவட்டம் மகாராஜபுரம் ஊராட்சியை சேர்ந்த தூய்மை காவலர் ராஜேந்திரன் ஆகிய இருவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 25 லட்சம் வீதம் 50 லட்சம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.