தமிழகத்தில் 2030-க்குள் 1 லட்சம் கோடி அளவிற்கு பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், மாபெரும் கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி முன்னிலையில் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் முத்ராகடன், மகளிர் சுயஉதவிக் குழு கடன், மாற்று திறனாளிக் கடன், சிறு வணிகக்கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன் உள்ளிட்ட 12 வகையான கடன்கள் 5 கோடியே 68 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயில் 2 ஆயிரத்து 246 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, " சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் வளர்ச்சிக்கு கூட்டுறவுத்துறை முக்கிய பங்காற்றியது. அது ஒரு மக்கள் இயக்கமாகவே மாறி விட்டது. பொதுமக்களின் பங்களிப்புடன் வேளாண் மற்றும் தொழில் ரீதியாக கிராமங்களை முன்னேற்ற பெரும் பங்காற்றியது கூட்டுறவு சங்கங்கள். இந்தியாவிலேயே மிகச்சிறந்த கூட்டுறவு மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
மேலும் கூட்டுறவு சங்கங்களே சாதாரண மக்களிடையே பண புழக்கத்திற்கு காரணமாக இருக்கிறது. பெண்கள் தாங்கள் வாங்கும் கடனை உறுதியாக திருப்பி செலுத்தி விடுவார்கள் என தாம் நம்பிக்கை கொள்வதாக தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக முதல்வர் நிதி நுட்ப கொள்கையை உருவாக்கி 2030/ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறினார்.
இந்தியாவில் பொருளாதார கட்டமைப்பில் இரண்டாம் இடம் பெற்றுள்ள தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வரும் பணியில் முதல்வர் ஈடுபட்டு வருகிறார் எனவும் அமைச்சர் கூறினார்.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!