தமிழகத்தில் மேலும் 1,329 பேருக்கு கொரோனா - சென்னையில் மீண்டும் அதிகரித்த பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 1,329 பேருக்கு கொரோனா - சென்னையில் மீண்டும் அதிகரித்த பாதிப்பு
தமிழகத்தில் மேலும் 1,329 பேருக்கு கொரோனா - சென்னையில் மீண்டும் அதிகரித்த பாதிப்பு

தமிழகத்தில் 1,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 12 வயதுக்குட்ப்பட்ட சிறுவர்கள் 80 பேர் ஆவர். இந்த எண்ணிக்கை மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனா உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை, 26,78,265 என்றாகியுள்ளது.

இதன்மூலம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,344 -ல் இருந்து 1,329 என குறைந்துள்ளது. இதில் சென்னையில் 171 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் கோவை - 132 பேர், செங்கல்பட்டு 99 பேர், திருப்பூர் - 91 பேர், ஈரோடு - 78 பேர், நாமக்கல் - 63 பேர், திருவள்ளூர் - 54 பேர், திருச்சி - 50 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,130 ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 1,436 பேர் குணமடைந்துள்ளதை தொடர்ந்து, இதுவரை 26,26,352 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று மொத்தம் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகள், 1,40,091. இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகள் 4,84,63,913. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை இறந்தோர் எண்ணிக்கை மொத்தமாக 35,783 என உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com