கொரோனா பாதிப்பு சென்னை, மதுரையில் குறைவு: மற்ற மாவட்டங்களில் கணிசமாக உயர்வு

கொரோனா பாதிப்பு சென்னை, மதுரையில் குறைவு: மற்ற மாவட்டங்களில் கணிசமாக உயர்வு
கொரோனா பாதிப்பு சென்னை, மதுரையில் குறைவு: மற்ற மாவட்டங்களில் கணிசமாக உயர்வு

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 29,870-ல் இருந்து 30,744 ஆக உயர்ந்துள்ளதாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

துமிழகத்தில் 30,718 வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 26 பேர் என மொத்தம் 30,744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,55,648 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,744 ஆக உயர்ந்துள்ளது. ஜனவரி 1ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 22ஆம் தேதி வரை 30,744 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மேலும் 6,452 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 7,038 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு 7,452 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 6,452 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் மேலும் 33பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,178 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 18 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,87,358-ல் இருந்து 1,94,697 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 23,372 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 28,71,535 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

தமிழகத்தில் சென்னை மதுரை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, ஈரோடு, திருப்பூர், தஞ்சை, சேலம், கிருஷ்ணகிரி, நெல்லை, நாமக்கல், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கணிசமாக உயர்ந்துள்ளது.

அதேபோல் திருவண்ணாமலையில் 592 பேரும், கடலூரில் 587 பேரும், விருதுநகரில் 529 பேரும் விழுப்புரத்தில் 511 பேரும், ராணிப்பேட்டையில் 484 பேரும் பதிக்கப்பட்டுள்ளனர். தேனியில் 477, திருபத்தூர் 434, தருமபுரி 397, தூத்துக்குடி 351, திருவாரூர் 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த 21 வயதே ஆன இளம்பெண் வேறு இணை நோய்கள் இல்லாத நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் திருச்சியைச் சேர்ந்த 38 வயது இளைஞரும் இணை நோய்கள் இன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com