தமிழகம் முழுவதும் 7-வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் 7-வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் 7-வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் 7-வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்களிலும் நடமாடும் முகாம்கள் மூலமாகவும் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

மொத்தம் 56 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ள நிலையில், முகாமை பயன்படுத்திக் கொள்ள, மருத்துவத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஐந்து கோடியே 73 லட்சம் டோஸ் செலுத்தப்பட்ட நிலையில், இன்றைக்குள் 6 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையை பொருத்தவரை 200 வார்டுகளில் ஆயிரத்து 600 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து, மாநகராட்சியின் இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com