மருது படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் விஷால்-முத்தையா கூட்டணி

மருது படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் விஷால்-முத்தையா கூட்டணி
மருது படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் விஷால்-முத்தையா கூட்டணி

இயக்குநர் முத்தையா - விஷால் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணையவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்தி நடிப்பில் ‘விருமன்’ படத்தினை இயக்கிவரும் முத்தையா அடுத்ததாக விஷால் படத்தினை இயக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இக்கூட்டணி கடந்த 2016 ஆம் ஆண்டு ‘மருது’ படத்தில் இணைந்திருந்தனர். இந்த நிலையில், மீண்டும் இணையவிருக்கிறார்கள் என்றும் இப்படத்தினை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் மூலம் தயாரிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

நடிகர் விஷால் நடிப்பில் பிப்ரவரி 4 ஆம் தேதி ‘வீரமே வாகை சூடும்’ வெளியாகவிருக்கிறது. அதனைத்தொடர்ந்து, ‘லத்தி’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை முடித்தப்பிறகு விஷால் முத்தையாவின் படத்தில் இணைகிறார் என்று சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com