அடுத்த படம் பற்றி அறிவித்தார் ராஜமவுலி!

அடுத்த படம் பற்றி அறிவித்தார் ராஜமவுலி!
அடுத்த படம் பற்றி அறிவித்தார் ராஜமவுலி!
Published on

பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உட்பட பலர் நடித்த படம், ’பாகுபலி’. இதன் இரண்டு பாகங்கள் வெளியாகி, இந்தியா முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்தப் பட ரிலீஸுக்குப் பிறகு ஓய்வெடுக்க வெளிநாடுக்கு சென்ற ராஜமவுலி இந்தியா திரும்பினார். அடுத்த படம் முடிவெடுக்கவில்லை என்று அவர் பலமுறை சொன்னாலும், அவரது அடுத்தப் படம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.இந்நிலையில் தனது அடுத்த படம் பற்றி ராஜமவுலியே தெரிவித்துள்ளார். 
‘எனது அடுத்த படத்தை டிவிவி தானய்யா தயாரிக்கிறார். இது தெலுங்கில் தயாராகிறதா வேறு மொழிகளிலும் தயாராகிறதா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. யார் நடிக்கிறார்கள் என்பதும் முடிவாகவில்லை. சமூகக் கதையை கொண்ட படமாக இது இருக்கும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் டிவிவி தானய்யா, தெலுங்கில் தேசமுத்ருடு, ஜுலாயி, நாயக் உட்பட சில படங்களை தயாரித்தவர். இந்தப் படத்தை அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்குவார் என்று தெரிகிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com