நிறைமாத கர்ப்பிணியான சின்னத்திரை நடிகை மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் மலையாள திரையுலகம்!

மலையால சின்னத்திரை நடிகையான பிரியா மாரடைப்பினால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
priya
priyapt web

டாக்டர் பிரியா மலையாளத்தில் வெளியான கருத்தமுத்து எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்து புகழ் பெற்றவர். 35 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். மருத்துவமனையில் வழக்கமான பரிசோதகளை செய்து வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவை நடிகர் கிஷோர் சத்யா தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அவரது 8 மாத குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றினர். தற்போது குழந்தை ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறது என்றும் வேறு எந்த உடல்நலப் பிரச்சனையும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த பிரியா திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்தார். மருத்துவமனையில் பணியாற்றி வந்த அவரது மறைவு கேரள திரையுலகினர் மற்றும் அவரது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் கிஷோர் சத்யா ப்ரியாவின் மரணம் குறித்து பதிவிடுகையில், “35 வயதே நிரம்பிய ஒருவர் மரணம் அடையும் போது இரக்கம் சொல்லக்கூட மனம் வரவில்லை. இந்த துயரில் இருந்து அவரது கணவரும் அவரது தாயாரும் எப்படி மீண்டு வருவார்கள் என தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.

சில தினங்கள் முன் மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் மரணமடைந்திருந்தார். அவர் தான் வசித்து வந்த குடியிருப்பிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com