ராஜமவுலி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ்!

ராஜமவுலி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ்!
ராஜமவுலி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ்!

ராஜமவுலி இயக்கும் ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.

இயக்குனர் ராஜமவுலி, பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்கு பிறகு இந்தியா முழுவதும் பிரபலமானார். சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘பாகுபலி’ , சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோருக்கும் இந்தியா முழுவதும் வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படம் காரணமாக இப்போது மூன்று மொழிகளில் நடிக்கும் ஹீரோவாக உயர்ந்திருக்கிறார் பிரபாஸ். அவர் நடிக்கும் ’சாஹோ’ படம் மெகா பட்ஜெட்டில் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாகிறது. ராணா ஏற்கனவே இந்தி படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் ராஜமவுலி அடுத்து யாரை ஹீரோவாக வைத்து படம் இயக்க போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு வதந்திகளும் வெளியாயின. வழக்கமாக ராஜமவுலி படங்களுக்கு கதை எழுதும் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத், ‘அடுத்த படத்தின் கதை யில் 2 ஹீரோக்கள் நடிக்கின்றனர்’ என்று கூறியிருந்தார். அதன்படி ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா ஹீரோக்களாக நடிப்பதாகக் கூறப்பட்டது.

பின்னர், இதை ராஜமவுலியும் உறுதிப்படுத்தி இருந்தார். இரண்டு ஹீரோக்களோடு தான் இருக்கும் புகைப்படத்தையும் ’ஆர்ஆர்ஆர்’ என்ற தலைப்பையும் அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்தப் படம் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலை யில் கடந்த 11 ஆம் தேதி இதன் தொடக்க விழா நடந்தது.

இந்தப் படத்தில் யார் ஹீரோயினாக நடிக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கி றார். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையான மகாநடி (தமிழில், நடிகையர் திலகம்) படத்தில் நடித்த பிறகு தமிழை விட தெலுங்கில் கீர்த்தி சுரேஷுக்கு அதிக புகழும் பாராட்டும் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் ராஜமவுலி படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னொரு ஹீரோயின் ஒருவரும் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com