நடிகர் சங்கத்திற்கு வந்து குவிந்த நிதி - யார் யார் எவ்வளவு அளித்தார்கள்? 

 நடிகர் சங்கத்திற்கு வந்து குவிந்த நிதி - யார் யார் எவ்வளவு அளித்தார்கள்? 

 நடிகர் சங்கத்திற்கு வந்து குவிந்த நிதி - யார் யார் எவ்வளவு அளித்தார்கள்? 
Published on
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இதுவரை வசூலான நிதி தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
 
ஊரடங்கு உத்தரவால் நாடே முடங்கிப் போய் உள்ளது. ஆகவே திரைத்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுவரை நடிகர் சங்கத்திற்கு எவ்வளவு நிதி வந்துள்ளது என்பது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.   அதன்படி திரட்டப்பட்ட நிதிக் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கை விவரம் வருமாறு: 
 
 
கொரோனா தொற்றால் நாடெங்கும் முடங்கிக் கிடக்கும் வேளையில் நாடக மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகளுக்கு  உதவுமாறு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தனி அதிகாரியிடம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் பலர் வேண்டுகோள் வைத்தனர். அதன்படி, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள திரைப்பட நலவாரிய அமைப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா ₹1000  உதவி வழங்கிடத் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 
 
 
அதைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் நிதி உதவிகளையும் பொருள் உதவிகளையும் அளித்து வருகிறார்கள். கடந்த தினம் நடிகர் சங்கத்துக்கு  ராகவா லாரன்ஸ் ரூபாய்-25 லட்சம் நிதி உதவி வழங்கி சிறப்புச் செய்துள்ளார். இந்த பெரும் உதவி  பல பேருக்குப் பயனுள்ளதாக இருக்கும். அவருக்கும்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 
 
மேலும் இதுவரை,
 
 பூச்சி முருகன்- ₹10,000,
 ஐஸரி கணேஷ் - ரூபாய் 10 லட்சம்,
 சத்யப்ரியா- ரூபாய்10,000,
 பிளாக் பாண்டி- ரூபாய் 100,
பொன்வண்ணன்- ரூபாய் 25,000,
 சேலம் பார்த்திபன் -ரூபாய் 10,000, ரித்விகா(எ)மாலதி- ரூபாய் 5,000, 
SJ. சூர்யா- ரூபாய் 50,000,
கோவை சரளா- ரூபாய் 10,000,
 ரோகிணி- ரூபாய் 10,000,
சந்தான பாரதி- ரூபாய் 5,000,
லதா சேதுபதி- ரூபாய் 10,000,
நாகி நீடு- ரூபாய் 10,000, 
சச்சு(எ) சரஸ்வதி - 10,000,
பிரபா ரமேஷ் -ரூபாய் 10,000,
ஆதி- ரூபாய் 25,000,
சூரி- ரூபாய் 1 லட்சம்
M. நாசர்- ரூபாய் 50,000,
சங்கீதா ரூபாய் 15,000,
SI.கார்த்தி- ரூபாய் 2 லட்சம்
R.K.சுரேஷ்- ரூபாய் 10,000,
M. சசிகுமார் - ரூபாய் 1லட்சம்,
குட்டி பத்மினி- ரூபாய் 15,000,
பசுபதி- ரூபாய் 15,000, 
அழகு.K- ரூபாய் 10,000,
 கருணாஸ்- ரூபாய் 10,000,
 S.செல்வா- ரூபாய் 1,000,
சந்தோஷ் பிரசன்னா- ரூபாய் 2,000,
விவேக்- ரூபாய் 3,50 லட்சம்,
JC ஜூவல்லர்ஸ் லிமிடெட்- ரூபாய் 20,000, 
R. சாரதா- ரூபாய் 10,000, 
வெண்ணிறாடை மூர்த்தி-  ரூபாய் 20,000 
 
 
இவர்கள் நிதி உதவி அளித்துள்ளனர். மேலும் பல நடிகர் நடிகைகள் தமிழ் நாடு முழுக்க உள்ள நாடக நடிகர் நடிகைகள் வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்கள் கொடுத்து உதவி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் கரம் நீட்டி உதவி அளித்த இவர்கள் அனைவருக்கும் அனைத்து நடிகர்,நடிகை சமூகம் சார்பாகத் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நாசர் மற்றும் நிர்வாகிகள் இதன்மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com