ஆஸ்கரில் கௌரவிக்கப்பட்ட மறைந்த இந்திய கலைஞர்கள்! | Oscar | Kotta Seenivasarao | Saroja Devi
98வது ஆஸ்கர் விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. இதில் `One Battle After Another' 6 விருதுகள், `Sinners' 4 விருதுகள் வென்றன. மேலும் `One Battle After Another' படத்திற்காக தன முதல் ஆஸ்கர் விருதை Paul Thomas Anderson வென்றது, சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை முதன்முறையாக வென்ற பெண் Autumn Durald Arkapaw என பல சிறப்புகளும் இருந்தன.
இந்த விருது வழங்கும் நிகழ்வின் இடையே 2025 - 2026 காலகட்டத்தில் மறைந்த கலைஞர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்களை கௌரவிக்கும் வகையில், In Memoriam நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக விருது வழங்கும் நிகழ்வில் இடைவெளி விட்டு, இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராப் ரெய்னர், ராபர்ட் ரெட்ஃபோர்ட், ராபர்ட் டுவால், கேத்தரின் ஓ'ஹாரா, டயான் கீடன் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு ஒரு சிலருக்கு மட்டும் தனியாக தயாரிக்கப்பட்ட அஞ்சலி வீடியோக்கள் திரையிடப்பட்டன.
கடந்த ஆண்டு மறைந்த நட்சத்திரங்களின் பட்டியல் நீண்டது என்பதால் அமைப்பாளர்கள், ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரிவான பட்டியலை வெளியிட்டனர். அந்தப் பட்டியலில், தர்மேந்திரா, மனோஜ் குமார் பி, சரோஜா தேவி மற்றும் கோட்டா சீனிவாச ராவ் போன்ற இந்தியத் திரையுலகின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளை ஆஸ்கர் விருது கௌரவித்தது. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பாலிவுட்டின் மிகவும் பிரியமான நட்சத்திரங்களில் ஒருவரான தர்மேந்திரா, மனோஜ் குமாருடன் இணைந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்றார், திரைப்படங்களுக்கு அவர் அளித்த பங்களிப்பிற்காகக் கொண்டாடப்பட்டார்.
தென்னிந்தியத் திரையுலகில், கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை பி.சரோஜா தேவியும் தனது குறிப்பிடத்தக்க திரைப்பயணத்திற்காக நினைவுகூரப்பட்டார். மூத்த தெலுங்கு நடிகரும் முன்னாள் அரசியல்வாதியுமான கோட்டா ஸ்ரீனிவாச ராவும் நினைவுகூரப்பட்டார்.

