’பழசிராஜா’, ’தூங்காவனம்’ தயாரிப்பாளர் மகன் ஓமனில் கைது

’பழசிராஜா’, ’தூங்காவனம்’ தயாரிப்பாளர் மகன் ஓமனில் கைது
’பழசிராஜா’, ’தூங்காவனம்’ தயாரிப்பாளர் மகன் ஓமனில் கைது

திரைப்படத் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் மகன் பைஜூ, ஓமனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல கேரள தொழிலதிபர் கோகுலம் கோபாலன். இவர் தமிழகத்திலும் தொழில் செய்துவருகிறார். மலையாளத்தில் மம்மூட்டி, சரத்குமார் நடித்த ’பழசிராஜா’ உட்பட பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். தமிழில், கமல்ஹாசன் நடித்த ’தூங்காவனம்’ படத்தைத் தயாரித்துள்ளார். இப்போது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ’தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இவரது மகன் பைஜூ கோபாலன். இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழில் செய்துவருதாகத் தெரிகிறது. இவரது தொழில் கூட்டாளி, சென்னையை சேர்ந்த ரமணி. 

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ரமணிக்கு சொந்தமான சில ஓட்டல்களையும் கிளினிக்குகளையும் வாங்க முடிவு செய்திருந்தார் பைஜூ. இதற்காக பைஜூ 2 கோடி திர்ஹாமுக்கு (சுமார் ரூ.39.5 கோடி) காசோலை கொடுத்திருந்தாராம். இந்த காசோலை பணமில்லாமல் திரும்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் பைஜூ ஓமனில் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை ஜாமீன் எடுக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன.

(கோகுலம் கோபாலன்)

ராகுல் காந்தியை எதிர்த்து கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட, பாரத் தர்ம ஜன சேனாவின் தலைவரான துஷார் வெள்ளப்பள்ளி காசோலை மோசடி வழக்கில் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மற்றொரு கேரள தொழிலதிபரும் அங்கு கைது செய்யப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com