கடவுள் கைவிட்டாலும் விஜய் சேதுபதியின் உழைப்பு கைவிடாது: இயக்குனர் சுசீந்திரன்
புஷ்கர் காயத்திரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான படம் விக்ரம் வேதா. ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. நேற்று முதல் நாள் முதல் காட்சியை பார்வையிட்ட நடிகர் சூர்யாவும் படத்தை வெகுவாக புகழ்ந்திருக்கிறார்.
இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் விக்ரம் வேதா திரைப்படத்தை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "விக்ரம் வேதா படத்தில் நடிகர்களை இயக்குனர் கையாண்ட விதம் நேர்த்தியாக இருந்தது. மாதவன், விஜய் சேதுபதி இருவருமே படத்தில் கலக்கல் செய்திருக்கிறார்கள். நம்பின கடவுள் கைவிட்டாலும் உழைப்பு கைவிடாது என்பதற்கு விஜய் சேதுபதி ஒரு உதாரணம். இன்றைய தலைமுறை நடிகர்களில் என்னை நடிப்பில் வியக்க வைத்த இரண்டாவது நடிகர் விஜய் சேதுபதிதான். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்" என கூறியுள்ளார்.

