Bigg Boss7: 49-ம் நாள் பேச்சு வராமல் தொண்டை அடைக்க பேசிய பூர்ணிமா; நடந்தது என்ன?

”நான் புல்லிங் பண்ணியவர்களை கண்டு முன்பு பயந்து ஓடிவிடுவேன். ஆனால் இப்பொழுது எதிர்த்து நிற்கிறேன். அவர்களே வந்து உங்க நட்பு எங்களுக்கு வேண்டும் என்று சொல்லும்போது பெருமையாக இருக்கு” - அர்ச்சனா
பிக்பாஸ்
பிக்பாஸ்PT

பிக்பாஸில் 49-ம் நாளான ஞாயிறுக்கிழமை மீண்டும் அகம் டீவி வழியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கமல்ஹாசன், பிக்பாஸ் தொடங்கி 50 நாட்கள் நிறைவடைந்த நிகழ்ச்சிக்கு ”பாதிக் கிணறை தாண்டிட்டீங்க.. இன்னும் மீதிக் கிணறை தாண்ட வேண்டும். இந்த 50 நாளில் உங்களுக்குள் இருந்த மாற்றத்தை சொல்லுங்கள் என்று கேட்கவும், இதில் அனைவரும் அவரவர்களின் கருத்துகளைச் சொல்ல, அர்ச்சனா ”நான் புல்லிங் பண்ணியவர்களை கண்டு முன்பு பயந்து ஓடிவிடுவேன். ஆனால் இப்போது எதிர்த்து நிற்கிறேன். அவர்களே வந்து உங்க நட்பு எங்களுக்கு வேண்டும் என்று சொல்லும்போது பெருமையாக இருக்கு” என்றார். இவரின் இப்பதில் மாயாவையும் பூர்ணிமாவையும் கடுப்பேத்தி இருக்க வேண்டும்.

பிக்பாஸ்
Bigg boss 7: மாயாவிற்கும் பூர்ணிமாவிற்கும் இடையே விரிசலை ஏற்படுத்துகிறாரா விஷ்ணு?

இன்னும் சொல்லப்போனால் பூர்ணிமா, விட்டால் அழுதுவிடுவார் என்பதுபோல காணப்பட்டார். அதற்கு காரணம் அர்ச்சனாவின் பதிலால் மக்கள் கைதட்டு அகம் டீவி வழியாக அகத்தை நிரப்பி இருக்கவேண்டும் அந்த அதிர்ச்சியின் வெளிப்பாடுதான் பூர்ணிமாவின் முகமாற்றம்.

மாயா எழுந்து, “நான் இதுவரை கண்டெண்டுக்காகத்தான் கேம் ஆடினேன். என்னுடைய இன்னொரு முகத்தை இனி நீங்கள் பார்க்கப்போறீங்க. அது விசித்திராவிற்கு எதிராக இருக்கும்” என்று சினிமா வசனம் பேசினார்.

அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் வெற்றி நடை போடுபவர்கள், வெட்டி நடை போடுபவர்கள் யார் என்று கமல் கேட்டதும், தினேஷ் மாயாவை வெற்றி நடை என்றும் விசித்திராவை வெட்டி நடை என்றும் தனது கருத்தை தொவித்தார்.

NGMPC22 - 147

ரவீனா அர்ச்சனாவுக்கு வெற்றி நடையும் மாயாவுக்கு வெட்டி நடையும் கொடுத்தார்.

அர்ச்சனா மாயாவுக்கு வெற்றி நடையும் பூர்ணிமாவுக்கு வெட்டி நடையையும் தந்தார். அதையே விசித்திராவும் வழிமொழிந்தார். ஏற்கெனவே சோகத்தில் இருந்த பூர்ணிமாவுக்கு துக்கம் தொண்டையை அடைக்க ஆரம்பித்தது.

“வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி” என்றுபாட்டு ஒன்று தான் பாடவில்லை. பூர்ணிமாவின் முகம் அத்தனை வாடலாக இருந்தது. இதை கமல்ஹாசன் கண்டுபிடித்து அவரிடம் கேள்வியும் கேட்டார். “பூர்ணிமா நீங்க விட்டா அழுதுவிடுவீங்கபோல... என்ன காரணம் என்று கேட்கவும்,

“அர்ச்சனா போனவாரம் முழுவதும் விக்ரமை நீ ஒன்னும் செய்யல வெட்டியாக இருக்கன்னு சொல்லியபடியே இருந்தாங்க... “ என்று சொல்லியதுடன், “நான் தண்ணீர் குடிச்சுக்கிறேன் என்று சொல்லி தண்ணீர் குடித்து தொண்டையில் இருந்த ப்ளாக்கை நீக்கிவிட்டு பேச ஆரம்பித்தார்.

“சார் நீங்க யார் செய்த தப்பையும் கேட்க மாட்டீங்கிறீங்க என்னைய மட்டும்தான் கேட்குறீங்க” என்று பேசவும், இதற்கான விளக்கத்தை கமல் கேட்டார்.

” சார் அர்ச்சனா அடிக்கடி எங்களைப் பார்த்து புல்லிங் பண்றோம், புல்லிங் பண்றோம்னு சொல்றாங்க.. ஆனால் நாங்க புல்லிங் பண்ணல.. அது கோவத்தின் வெளிப்பாடு. அதுக்கு நாங்க சாரியும் கேட்டோம்” என்றார்.

இதற்கு விளக்கமளித்த கமல் “நீங்க ஐந்து பேரும் சேர்ந்து ஒருத்தர பேசினால்.. அது புல்லிங்தான்” என்கிறார்.

மேலும் இதற்கான விளக்கத்தை விளக்கமாகவே பூர்ணிமாவுக்கு விளக்கினார். விசித்திரா, பூர்ணிமாவை வந்து கட்டிக்கொண்டு ஆறுதல் சொன்னார். ஆக இந்த வாரத்தில் பூர்ணிமா விசித்திரா கேங்கில் இருப்பார் என்று உறுதியாக சொல்லமுடியும்.

அதேநேரம் விசித்திராவும், அர்ச்சனாவும் ரூல்ஸ் பிரேக் பண்ணியதை வைத்து அவர்களை வறுத்தெடுத்தார்.

அடுத்ததாக நாமினேசன் பிராசஸில் கானாபாலா வெளியேற்றப்பட்டார். இனி என்ன நடக்கப்போகுது என்பதை நாளை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com