Bigg Boss 7: ”சிங்கம் சிங்கிளாதான் வரும்” ஜோவிகாவின் டி-சர்ட்க்கு பின் இப்படியொரு கதை இருக்கிறதா?

கடந்த சில நாட்களாக ஜோவிகா யாருடனும் சண்டையிடாமல் அமைதியாக இருப்பது போல் தோன்றுவதற்கு, ஒரு காரணம் உண்டு என்று மக்களுக்கு தோன்றுகிறது.
வனிதா ஜோவிகா
வனிதா ஜோவிகாweb

கடந்த சில நாட்களாக ஜோவிகா யாருடனும் சண்டையிடாமல் அமைதியாக இருப்பது போல் தோன்றுவதற்கு, ஒரு காரணம் உண்டு என்று மக்களுக்கு தோன்றுகிறது.

கடந்த வாரம் ஜோவிகா ஒரு டி-சர்ட்டை போட்டிருந்தார். அதில் “சிங்கம் சிங்கிளா தான் வரும்” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதற்கு காரணம் வனிதா என்று சொல்லப்படுகிறது. சிங்கம் சிங்கிளா வரும் என்ற வாசகம் எழுதிய டி-சர்ட்டை வனிதா தனது மகள் ஜோவிகாவுக்கு அனுப்பியது ஒருவித சமிக்கை என்று மக்கள் நினைக்கின்றனர். அதாவது ஜோவிகாவிற்கு “நீ உன் ஆட்டத்தை தனியாக ஆடு, கூட்டு சேராதே...” என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார். அதனால் தான் ஜோவிகா கடந்த சில நாட்களாக யாருடன் பேசாமல் சாப்பிடுவது, தூங்குவது என்று இருக்கிறார். இப்படி அவர் தூங்கி முழிக்கும் சமயம் இந்த வார கேப்டன் டாஸ்க் ஆரம்பித்து விட்டது. இதில் ஜோவிகா எப்படியாவது கேப்டன் பதவியை பெறவேண்டும் என்று கடுமையாக விளையாடினாலும் ( குட்டி ஸ்டேஜ் மேல் ஏறி நிற்பது) அவரது கேங்கே அவரை என்கரேஜ் பண்ணவில்லை.

வனிதா ஜோவிகா
Biggboss7: “என்ன பார்த்தா எப்படி தெரியுது?”..களைகட்டிய அர்ச்சனாவின் ஆட்டம்; க்ளைமேக்ஸில் ட்விஸ்ட்!

இந்த விளையாட்டில் விஷ்ணு, கூல் சுரேஷ், அர்ச்சனா மூவரும் அடுத்த வார கேப்டனுக்கு போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் யாரும் நமக்கு ஆதரவு தரவில்லையே நம்மால் கேப்டனாக முடியவில்லையே என்று ஜோவிகா ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, இந்த ரவீனா பொண்ணு அவர் அருகில் சென்று கேங்.. கேங்.. என்று கத்தியிருக்கிறார்.

ரவீனா தன்னை புல்லிங் செய்வதாக நினைத்த ஜோவிகா “இது புல்லிங்” என்று சொல்லி அழ ஆரம்பித்துவிட்டார். பொதுவாக ஜோவிகா தான் அடுத்தவர்களை அழவைப்பார், ஆனால் ஜோவிகாவையே ரவீனா அழவைத்துவிட்டார் என்றால் ரவீனா தன்னுள் தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பிவிட்டிருக்கிறார்.

ஜோவிகா அழுதபடி, “இவங்களோட நான் இருக்கனும்னு அவசியம் இல்ல... சும்மா என்னை கேங்...கேங்...ன்னு சொல்லி கடுப்பேத்திகிட்டு இருக்காங்க... நா இப்போ கேங்கிலேயே இல்ல... நா தனியா தானே விளையாண்டுட்டு இருக்கேன். நா கெளம்பறேன் வுடுங்கடா சாமி... எங்கம்மாவை பார்க்கணும் என்னை அனுப்பிடுங்க பிக்பாஸ்... “ என்று அழுகிறார்.

மக்களின் மைண்ட் வாய்ஸ்: இன்னும் ஒரு நாள் வெயிட் பண்ணுங்க ஜோவிகா.. வோட்டிங்ல நீங்க தான் கடைசில இருக்கீங்க... இந்த வாரம் நீங்க வீட்டுக்கு போறீங்களா அல்லது வேற யாராவது போறாங்களான்னு பார்த்துட்டு அப்புறம் போகலாம்.

வனிதாவின் சமிக்கை போல போல பூர்ணிமாவும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன் வெளியில் மக்கள் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ளும் விதமாக ஒவ்வொரு கலரை சமிக்கையாக வீட்டாரிடம் சொல்லிவிட்டு வந்துள்ளாராம்.

விஜய் டீவி

அதன்படி பூர்ணிமாவுக்கு இந்த கலரில் ஆடைகள் வந்தால் மக்கள் தன்னை பற்றி இப்படி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வாராம். அதனால்தான் சில வாரங்களாக பூர்ணிமா மாயாவிடமிருந்து விலகி, தான் செய்ததற்கெல்லாம் கண்ணீர் விட்ட படி, விசித்திராவின் தோளில் சாய்ந்துக்கொண்டு விஷ்ணுவுடன் சேர்ந்து விளையாடி வருகிறார். இதெல்லாம் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் பிக் பாஸ் வாரம் ஒவ்வொரு கலரை போட்டியாளர்களுக்கு அறிவிக்கவேண்டும். செய்வாரா..? இனி நாளை கமல் வரும் நாள் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com