BIGG BOSS DAY 60 | அர்ச்சனா, விஷ்ணு மோதல்... என்னதான் ஆச்சு கடைசியில?

நிக்சனை எப்படியாவது பதவிநீக்கம் செய்ய துடித்துக்கொண்டிருக்கும் மாயா, “நிக்சா... நேத்து கூல் சுரேஷ் பையில் இருக்கும் செங்கலை எடுத்து ஒளிச்சு வச்சு ரூல்ஸ் பிரேக் செஞ்சதை பற்றி கேட்டீங்களா?” என்று கேட்கிறார்.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7vijay tv

பிக்பாஸ் 60-ம் நாள்:

விஷ்ணு சரியாக பாத்ரூம் கிளீன் செய்யவில்லை என்று நிக்சனும், அர்ச்சனாவும் பேசிக்கொண்டதை ஒட்டுக்கேட்ட பூர்ணிமா அதை அப்படியே விஷ்ணுவிடம் போட்டுக்கொடுத்துவிடுகிறார். அத்துடன் நிறுத்தாமல் ”இந்த விஷயத்தை பற்றி நீங்க யார்கிட்டேயும் கேட்க கூடாது” என்றும் சொல்கிறார். ஆனால் சும்மா இருப்பாரா விஷ்ணு? நிக்சனிடம் சென்று “நான் இனிமேல்தான் டாய்லட்டை சுத்தம் செய்யப்போகிறேன். நாளைக்கு யாராவது சரியா சுத்தம் செய்யலைன்னா இது மாதிரி நீங்க அவங்கள கேள்வி கேட்கணும்” என்று கூறி, விஷயம் தெரிந்தது என்பதை போல உளறி விடுகிறார். இது தெரிந்த பூர்ணிமா விஷ்ணுவிடம் வந்து கோபப்படுகிறார். “உங்ககிட்ட இந்த விஷயத்தபத்தி யார்கிட்டையும் கேட்காதீங்கன்னுதானே சொன்னேன். இப்படி பண்றீங்களே” என்றார்.

பிக்பாஸ் 7
BiggBoss7: “பொளிச்..பொளிச்னு வச்சு செய்வேன்” “எங்க செய்யுங்க..” விஷ்ணுவிடம் ஆவேசம் காட்டிய அர்ச்சனா!
விஷ்ணு
விஷ்ணு

நிக்சனை எப்படியாவது பதவிநீக்கம் செய்ய துடித்துக்கொண்டிருக்கும் மாயா, “நிக்சா... நேத்து கூல் சுரேஷ் பையில் இருக்கும் செங்கலை எடுத்து ஒளிச்சு வச்சு ரூல்ஸ் பிரேக் செஞ்சதை பற்றி கேட்டீங்களா? “ என்று கேட்டதும், அங்கு எதார்த்தமாக கூல் சுரேஷும் வந்து விடுகிறார்.

மாயா இது குறித்து நேரடியாக கூல் சுரேஷிடமே கேட்க... “ஆமா, இதை ரூல்ஸ் பிரேக் செய்ததாக நினைத்தால் ரூல்ஸ் பிரேக்; இல்லை விளையாட்டாக நினைத்தால் விளையாட்டு... “ என்று கூலாக பேசி சென்றுவிட்டார். இந்த பக்கம் மாயா, அந்த பக்கம் கூல் சுரேஷ் என இருவருக்கும் இடையே மத்தளம் மாதிரி மாட்டிக்கொண்டு முழித்தார் நிக்சன்.

அடுத்ததாக ஒரு டாஸ்க். “திடீரென காலையில் எழுந்திரிக்கும் பொழுது, நீங்கள் வேறொருவராக மாறுகிறீர்கள், எப்படி நடந்துக்கொள்வீர்கள்” என்று கேள்வி கேட்கப்பட்டதும்,

vijay tv

அர்ச்சனா எழுந்து, “நான் மாயாவாக மாறினால் பூர்ணிமாவிடம் சென்று, ‘பூர்ணிமா... எனக்கு உன்னை பிடிக்கும், உனக்கு என்னை பிடிக்கும், அப்படி இருக்கும்பொழுது நம்முடைய பிரண்ட்ஷிப்பை பிக்பாஸுக்கு வெளியில் வச்சுக்கலாமே... வீட்டுக்குள்ள எதற்கு ?’ என்று கேள்வி கேட்பேன்” என்றார்.

ரவீனா பேசும்பொழுது, “நான் மாயாவாக இருந்தால் அடுத்தவர்களைப்பற்றி புரணி பேசுவதை வெளியில் வைத்துக்கொள்வேன்” என்றார்.

விக்ரம் பேசும் பொழுது, “நான் அர்ச்சனாவாக இருந்தால் அடுத்தவர்களின் காதருகில் சென்று கத்தி அவர்களின் காதை செவிடாக்கி விடுவேன்” என்றார்.

vijay tv

அடுத்த டாஸ்க்கில் தோற்றால் இரண்டு இரண்டு பேராக கயிற்றில் கட்டிவிட்டுவிடுவார்கள். இதை பிக்பாஸ் எப்பொழுது சொல்கிறாரோ அப்பொழுதுதான் கழற்ற வேண்டும் என்று ஒரு டாக்ஸ் விளையாடப்பட்டது. அதில் தோற்கவும், விஷ்ணு - அர்ச்சனா, மாயா - மணி, கூல் சுரேஷ்- விசித்திரா என்று எதிரும் புதிருமாக இருக்கும் ஜோடியை தேர்வு செய்து அவர்கள் கைகளை கயிற்றால் கட்ட உத்தரவிட்டார் பிக்பாஸ். இதில் அர்ச்சனாவுக்கும், விஷ்ணுவிற்கும் சண்டை வரவே... கோவத்தில் அர்ச்சனா தன் கை கட்டை அவிழ்த்து விட்டு வரண்டாவில் வந்து தனியாக அமர்ந்து விட்டார். இதை மற்ற போட்டியாளர்களான ரவீனா, மணி, மாயா, தினேஷ் ஆகியோர் சிரித்தப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இனி என்ன நடக்க இருக்கிறது என்பதை நாளை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com