Bigg boss 7: பிரிந்தது மாயா கூட்டணி; ’காலை சுத்தின பாம்பு சும்மா விடாது’ என விஷ்ணு சொன்னது யாரை?

மணி மாயாவை வெறுப்பேத்த நினைத்து மாயாவின் அருகில் வந்து குட்மார்னிங் சொல்லவும்,”என்ன மணி அருகில் வந்து குட்மார்னிங் சொல்றீங்க... இது ஏதோ ஸ்னாப் பண்ற மாதிரி இருக்கு?” - மாயா
bigg boss 7
bigg boss 7vijay tv

பிக்பாஸ் 50ம் நாள்:

மீண்டும் கேப்டன் பதவிக்கு வந்த தினேஷ், ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்பவர்கள் யார் என்பதை முடிவு செய்தார். அதன்படி விசித்திரா, விஷ்ணு, பூர்ணிமா, விக்ரம், ஜோவிகா, ப்ராவோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் பூர்ணிமாவுக்கு பயங்கர மன வருத்தம். கடந்த ஆறு வாரங்களாக பூர்ணிமா எதுவும் செய்யவில்லை என்று சொல்லிதான் தினேஷ் அவரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பியிருந்தார். “நான் எதுவும் செய்யலையா, நான் எதுவும் செய்யலையா” என்று சந்திரமுகி போன்று பூர்ணிமா தினேஷை பார்த்து கேட்க, தினேஷ் “நீங்க எதுவும் செய்யாததால்தான் உங்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறேன்” என்று கூறினார்.

bigg boss 7
Bigg Boss7: 49-ம் நாள் பேச்சு வராமல் தொண்டை அடைக்க பேசிய பூர்ணிமா; நடந்தது என்ன?

விசித்திரா கூல் சுரேஷிடம், “என்னையும் ஜோவிகாவையும் ஸ்மால் பாஸ் வீட்டில் போட்டு இருக்கிறார் என்றால், ஏதாவது பிரச்னை வரவேண்டும் என நினைத்து தான் தினேஷ் இதை செய்து இருக்கவேண்டும்“ என்று கூறினார். “அதனால்தான் மம்மி நீங்க டாப்2ல சேவ் ஆகி இருக்கீங்க” என்று மணி கூறியது சரிதான்.

மணி மாயாவை வெறுப்பேத்த நினைத்து, மாயாவின் அருகில் வந்து குட்மார்னிங் சொல்லவும், ”என்ன மணி அருகில் வந்து குட்மார்னிங் சொல்றீங்க... இது ஏதோ ஸ்னாப் பண்ற மாதிரி இருக்கு?”

vijay tv

நீங்க என்ன வம்பிழுத்தா நானும் வம்பிழுப்பேன்” என்கிறார் மணி.

வாவ்....

நா டாஸ்க் ஆடிட்டு இருக்கும் பொழுது நீங்க என்னை சீண்டினீங்க...

அதெல்லாம் நாங்க இப்போ விட்டுட்டோம். ரெட்கார்ட் அன்னிக்கு நீங்க என்னை வடவாய வச்சுகிட்டு.... அப்படீன்னீங்க, அதெல்லாம் தேவையே இல்லாதது

இது நீங்க சொன்ன வார்த்தை தான்” என்று மணி சொல்லவும், “ஏங்க இத நாங்க எங்களுக்குள்ள பேசிக்குவோம். அத வீக் எண்ட்ல சொல்றீங்கன்னா, நீங்க யாருன்னு எனக்கு புரிஞ்சிருச்சு, நீங்க ரொம்ப சீப்” என்கிறார்.

பதிலுக்கு மணியும், ”ஏங்க நான் சீப்னா, நீங்க அதவிட, அல்டிமேட் சீப், இருக்குறதுலேயே பெஸ்ட் சீப் நீங்கதான்”என்கிறார்.

சமீபகாலமாக மணியை வெளியேற்றவேண்டும் என்பதில் மாயா மும்மரமாக இருக்கிறார். இந்தநேரத்தில் மணி இப்படி பேசியதும், “வேண்டாம் இனி நீங்க எங்களுடன் இருக்க வேண்டாம், பிரிஞ்சிடலாம். இனி நீங்க எங்களுக்கு எதிரி” என்று வெட்டவெளிச்சமாக அவரிடமே சொல்லிவிட்டார்.

அடுத்தது நாமினேசன் பிராசஸ் ஆரம்பித்தது. விஷ்ணுவிடம் அதிக சில்வர் ஸ்டார் இருந்ததால் அவர் நேரிடையாக இருவரை நாமினேட் செய்யலாம் என்று பிக்பாஸ் கூறியதும், விஷ்ணு முதல் நபராக மாயாவை நாமினேஷன் செய்தார். அடுத்த நபராக அக்‌ஷயா. இருவரையும் நேரிடையாக விஷ்ணு நாமினேஷன் செய்தார். அடுத்ததாக ஓட்டின் அடிப்படையில், மணி, அர்ச்சனா, ரவீனா, பூர்ணிமா, விசித்திரா, ப்ராவோ. இதில் நிக்சனை நாமினேட் செய்யவில்லை என்று ஜோவிகா, மாயா வருத்தப்பட்டனர்.

அடுத்தது ஷாப்பிங் டாஸ்க் இதற்கு அக்‌ஷயா விக்ரம் இருவரும் சென்றனர். அக்‌ஷயா விஷம், அது கால சுத்தின பாம்பு கடிக்காம இருக்காது, ஆகவே உஷாரா இருங்க என்று விசித்திராவை எச்சரிக்கிறார் விஷ்ணு. இத்துடன் நேற்றைக்கான பிக்பாஸ் முடிந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com