ஆண் குழந்தைகளையும் சரியாக வளர்க்க வேண்டும்.. பெண்கள் பாதுகாப்பு குறித்து நடிகை ரேவதி கருத்து!
சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற BSG அமைப்பின் 6ஆவது மகளிர் கருத்தரங்கில் கலந்து கொண்ட நடிகை ரேவதி, பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுடன் ஆண் குழந்தைகளையும் சரியான மதிப்புகளுடன் வளர்க்க வேண்டும் என கூறினார். மாற்றத்துக்காக பிறரை நம்பாமல், ஒவ்வொரு பெண்ணும் தன்னைத்தானே மாற்றிக்கொள்வதன் மூலம் சிறந்த சமூகத்தை உருவாக்கலாம் என்று அவர் வலியுறுத்தினார்.
பாதுகாப்பை உறுதி செய்ய பெண்களிடமும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், ஆண் குழந்தைகளையும் சரியாக வளர்க்க வேண்டும் என நடிகை ரேவதி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற பாரத் சோகா கக்காய் (BSG) அமைப்பின் 6ஆவது மகளிர் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர், மாற்றத்துக்காக மற்றவர்களை எதிர்பார்க்காமல் ஒவ்வொரு பெண்ணும் தன்னைத்தானே மாற்றிக்கொள்வதன் மூலம் சிறந்த சமூகத்தை உருவாக்க முடியும் என்றார்.
விழிப்புணர்வை உறுதியான செயல்களாக மாற்றுவதுடன், பெண்கள் தங்களின் சுய ஆற்றலை உணர்ந்து சவால்களை எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ரேவதி வலியுறுத்தினார்.

