பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்

பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்

பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்
Published on

பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா, உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.

மேட்டுப்பாளையம் அருகிலுள்ள புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளை சுப்பையா. சினிமா ஆர்வம் காரணமாக சென்னை வந்த அவர் சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல் பல  முன்னணி நடிகர்களுடன் நடித்தார். அவர் நடிக்க வந்த புதிதில் சுப்பையா என்ற பெயரில் பலர் இருந்ததால் தனது பெயருடன் ’வெள்ளை’யை சேர்த்துக்கொண்டார். ’வைதேகி காத்திருந்தாள்’, ’கரகாட்டக்காரன்’ உள்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். ‘மேகங் கருக்கையிலே புள்ள தேகம் குளிருதுடி' என்ற பாடலில் தனியாக ஆடி பாடி நடித்தவர் இவர். வடிவேலுவுடன் இவர் நடித்த, ‘திரும்ப திரும்ப பேசற நீ...’ காமெடி காட்சி புகழ்பெற்ற ஒன்று. கவுண்டமணி, செந்தில், வடிவேலு மட்டுமல் லாமல் 3 தலைமுறை நடிகர்களோடு நடித்த இவர் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பினார்.

சிகிச்சைக்குப் பணமின்றி அவதிப்பட்ட அவர் அதற்காக கலெக்டரிடம் கடந்த சில வருடங்களுக்கு முன் மனு கொடுத்ததாக செய்திகள் வெளி யாயின. இந்நிலையில்  நேற்று இரவு அவர் காலமானார். இறுதி  சடங்கு இன்று நடக்கிறது. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரி வித்து வருகின்றனர்.

மறைந்த வெள்ளை சுப்பையாவின் மனைவி, சாவித்திரி. இவர்களது ஒரே மகள் தனலட்சுமி.  திருமணத்துக்குப் பின் குடும்பத்துடன் குவைத்தில் வசித்துவருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com