உலகம்

மியான்மர்: கிலோ கணக்கில் போதை மருந்துகள் அழிப்பு; போதை தடுப்பு தினத்தையொட்டி நடவடிக்கை

JustinDurai

சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு மியான்மரில் போதை மருந்துகள் கொட்டி அழிக்கப்பட்டன.

2 ஆயிரத்து 560 கிலோ ஹெராயின், 3 ஆயிரத்து 870 கிலோ ஓபியம், 730 கிலோ மரிஜூவானா மற்றும் பிற போதை மருந்துகள் யாங்கூனில் கொட்டி தீயிட்டு அழிக்கப்பட்டன. போதை மருந்துகளை பறிமுதல் செய்வது, அதை அழிப்பது உள்ளிட்ட பணிகளில் காவல்துறை மட்டுமே ஈடுபட முடியாது என்றும், போதை மருந்துகளை அழிக்கும் விவகாரத்தில் பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் கேட்டுக் கொள்ளப்பட்டது.