வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தில் இயங்கி வந்த கர்தல்காயா சொகுசு விடுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. துருக்கியில் சொகுசு விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.
வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தில் இயங்கி வந்த கர்தல்காயா சொகுசு விடுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி சொகுசு விடுதி முழுவதும் பரவியதால் அங்கிருந்தவர்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியேற முயன்றனர்.
சொகுசு விடுதி முழுவதும் மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்டதால், தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்பதிலும் சிக்கல் நிலவியது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர். இந்த தீவிபத்தில் 76 பேர் உயிரிழந்ததாகவும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.