earthquake ANI
உலகம்

30 நொடிகள் குலுங்கிய நிலம்.. இயற்கை காட்டிய கோபம்.. சிதறி ஓடிய பொதுமக்கள்!!

மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீட்டுக்கட்டு போல பிரம்மாண்ட கட்டிடங்கள் சரிந்து விழுந்ததால், மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

நாம் இயற்கைக்கு செய்ததை தான் அது நமக்கு செய்யும், இயற்கை அன்னை கோபம் மிகுந்தவள், இயற்கை கோரத் தாண்டவத்தின் முன் மனிதன் ஒரு சிறிய மழைதுளி போல் என்று பல்வேறு தத்துவங்கள், மனிதனின் ஆணவத்தை அடக்க பயன்படுத்தப்படுகிறது.

இது தத்துவங்கள் அனைத்தும் 2026-ஆம் ஆண்டில் மனித இனத்திற்கு தேவை மிகுந்ததாகவே மாறிவிட்டது. நிலநடுக்கம், புயல், வெள்ளம், அதி பயங்கர கனமழை, சுனாமி எச்சரிக்கை போன்ற பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு, எங்கு திரும்பினாலும் மக்களின் ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

el nino

இதுமட்டுமின்றி, எல்.நினோ மாதிரியான பருவகால பிரச்சனைகளும் வறட்சியை ஏற்படுத்தி, உலகையே புரட்டி போட்டுள்ளது. இப்படியான சூழலில், தென் அமெரிக்காவில் அமைந்துள்ள பெரு நாட்டில், நள்ளிரவு 1 மணி அளவில், அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பரினகொச்சேஸ் ( parinacochas ) மாகாணத்தில் உள்ள உபஹசோ ( Upahuacho ) நகரில் இருந்து 38 கி.மீ தூரத்திலும், 66 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

earthquake

இந்த பகுதி மட்டுமின்றி, அந்நாட்டின் ஐகா, ஆர்கியுபா ஆகிய நகரங்களிலும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால், அலறியடித்து வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள், சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதுவரை எத்தனை பேர் உயிரிழந்தனர்? மீட்பு பணிகளின் நிலவரம் என்ன? போன்ற விவரங்கள், இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முன்பு, கடந்த 2007-ஆம் ஆண்டு, 7.9 என்ற ரிக்டர் மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 500-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.