நாய்களிடமிருந்து வன விலங்குகளுக்கு பரவும் சி.டி.வி வைரஸை தடுக்க, வனத்துறை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தெருநாய்களுக்கு ஏற்படும் சி.டி.வி எனப்படும் கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ் பாதிப்பு, வன விலங்குகளுக்கு எளிதில் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தசூழலில், மத்திய பிரதேசத்தில் ஐந்து புலிகள், இந்த சி.டி.வி வைரஸால் உயிரிழந்துள்ளன.
இதனையடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அதிகாரிகள், ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்டங்களில் வனப்பகுதியையொட்டி தெருநாய்கள் அதிகரித்திருப்பதாகவும், எனவே வன விலங்குகளுக்கு சிடிவி வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே, வைரஸ் பரவலை தடுக்க தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது, அவற்றுக்கு தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகளை முடுக்கிவிட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.