செய்தியாளர்: மணிகண்டன்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 20 குழிகளில் இருந்து உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உட்பட 3,520-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைக்க பெற்றுள்ளன.
இந்நிலையில் தற்போது தோண்டப்பட்ட குழியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சிறுவர்கள் விளையாடும் சுடுமண் விளையாட்டுப் பொருள் தட்டு வடிவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறியபோது... 3-ம் கட்ட அகழ்வாய்வில், சிறுவர்கள் விளையாடும் தட்டு வடிவிலான விளையாட்டுப் பொருள் கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவித்தார்.