கொள்ளை நடந்த வீடு pt desk
தமிழ்நாடு

விழுப்புரம்: ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் தங்க நகைகள் கொள்ளை

விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் தங்க நகை மற்றும் 90 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: காமராஜ்

விழுப்புரம் வழுதரெட்டி மஞ்சு நகரில் வசித்து வரும் மணி என்பவர் அப்பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி ஓய்வு பெற்ற ஆசிரியர் சற்குணம். இவர்கள் இருவரும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்திற்கு சென்னையிலுள்ள தங்கள் மகளின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது இவர்களது வீட்டின் அருகில் வசிப்பவர்கள், இவர்களை தொடர்புகொண்டு வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக தகவல் கொடுத்துள்ளனர்.

gold theft

அதன் பேரில் வீட்டிற்கு சென்று மணி - சற்குணம் தம்பதி பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பிரோவில் இருந்த 40 சவரன் தங்க நகை மற்றும் 90 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து மணி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்க வந்த போலீசார், தடயங்களை சேகரித்து வழக்குப் பதிவு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.