மதுரையில் சுற்றுலா பயணிகளின் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதற்கு, பயணிகள் சட்டவிரோதமாக வைத்திருந்த சிலிண்டரில் ஏற்பட்ட Gas கசிவே காரணம் என்று கண்டறியப்பட்டிருந்தது.
அதையடுத்து, சட்டவிரோதமாக சிலிண்டர்கள் விற்கப்படுகின்றனவா என உணவு கடத்தல் தடுப்பு பிரிவின் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை செய்துவருகின்றனர். இந்நிலையில் இவ்விவகாரத்தில் , சிலிண்டரில் சட்டவிரோதமாக எரிவாயு நிரப்பிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.