தவெக தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்து pt
தமிழ்நாடு

”தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்..”! தவெக தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு வெற்றிப் பொங்கலாக இருக்கட்டும் என பொங்கல் வாழ்த்தை பகிர்ந்துள்ளார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.

Rishan Vengai

பொங்கல் பண்டிகை வருகின்ற 14-ம் தேதி முதல் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் என கொண்டாடப்படவிருக்கிறது.

தைப்பொங்கல் திருவிழா

இந்த பண்டிகையை கொண்டாடும் வகையில் பொதுமக்கள் அனைவரும் அவரவருடைய சொந்த ஊருக்கு திரும்பிவரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகை வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில் தவெக தலைவர் விஜய் மக்களுக்கு பொங்கல் வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.

பொங்கட்டும் வெற்றிப் பொங்கல்..

தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்துள்ள தவெக தலைவர் விஜய், “பொங்கல் திருநாள்! உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.

2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்!

இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம். அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!” என்று வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.