திமுகவுக்கு முக்கிய எதிரி தவெகதான் என்றும், மற்ற கட்சிகளை பற்றி பேசத் தயாராக இல்லை எனவும் திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னை ஆலந்தூரில் காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் அவர், ”குதிரை பேரம் தொடர்பான திமுகவின் மனுவை அரசியல் நாடகம் எனக் குறிப்பிட்ட மாணிக்கம் தாகூருக்கு நடைமுறைகள் தெரியாது என பதிலளித்தார்.
நீதிமன்றத் தேவைக்காகவே ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டதாக விளக்கமளித்தார். மேலும், திமுகவிடம் விளையாடினால் வேறு மாதிரி பேச நேரிடும் என்றும் ஆர். எஸ்.பாரதி எச்சரித்தார்.