சென்னை புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னையில் நில அதிர்வா? ... மக்கள் அச்சம்!

சென்னையில் நில அதிர்வா? .. என்ன நடந்தது?

ஜெனிட்டா ரோஸ்லின்

சென்னை அண்ணா சாலையில் 5 மாடி கட்டடம் ஒன்று உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று பணியாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்திருந்தனர். அப்போது பகல் 12 மணி அளவில் 5 மாடி கட்டடம் லேசாக குலுங்கியதாக தெரிகிறது.

நில அதிர்வு ஏற்பட்டதோ என்ற அச்சத்தில் ஊழியர்கள் வெளியேறினர்; இதனால், அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தேசிய புவியியல் அமைப்பு கூறுகையில் ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு ஏற்பட்டதாக எதுவும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவிக்கையில், ரிக்டரில் பதிவாகாத அளவுக்கு சென்னையில் நில அதிர்வு வருவது வழக்கம் என்று தெரிவித்துள்ளது.