சென்னையில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகளிடம் கருப்பு துப்பட்டாவை வாங்கி வைத்தது ஏன் என காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “எழும்பூர் பகுதியில் நடைபெற்ற அரசு விழா நிகழ்வின் போது சென்னை பெருநகர காவல் பாதுகாப்பு சென்னை காவல் (SCP) பிரிவினர் விழா நடக்கும் உள் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்ட நபர்களை தணிக்கை செய்து அனுப்பும் போது, கருப்பு துப்பட்டா அணிந்து வந்தவரிடம். கருப்பு துப்பட்டாவை வாங்கி வைத்தனர்.
இந்நடவடிக்கை அங்கு பணியிலிருந்த காவல் ஆளிநர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுட செயல்பட்டதால் நிகழ்ந்தது தெரியவருகிறது. இனி அவ்வாறு திகழாவண்ணம் இருப்பதற்கு பாதுகாப்பு சென்னை காவல் பிரிவிற்கு (SCP) தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.