தமிழக பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதனை 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி மக்கள் அதிகம் கூடும் இடங்களான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரையில் எல்இடி திரை அமைத்து ஒளிபரப்பப்படுகிறது. இதேபோல், அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், கத்திப்பாரா பூங்கா, டைடல் பூங்கா சந்திப்பு உள்ளிட்ட இடங்களிலும் நேரலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.