முதல்வர் விஜய் X
தமிழ்நாடு

சட்டமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறை தனித் தீர்மானம்.. முன்மொழியும் முதல்வர் விஜய்!

இன்று சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறை குறித்த தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிய உள்ளார்.

Rishan Vengai

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொகுதி மறுவரையறை குறித்த தனித் தீர்மானத்தை முன்வைக்கிறார். மக்களவை தொகுதி எண்ணிக்கையை 543 ஆகவே தொடர வேண்டும் என்றும், தற்போதைய 543 தொகுதிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற முடிவை சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், அரசு நிகழ்வுகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை கண்டிப்பாக முதலில் பாட வேண்டும் மற்றும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் முதலிய முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

CM vijay

அந்தவகையில் இன்று தமிழக சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிகிறார். மக்களவை தொகுதி எண்ணிக்கையை 543 என்ற அளவிலேயே தொடர வேண்டும் என்றும் தற்போதுள்ள 543 தொகுதிகளிலேயே பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. தொகுதி மறுவரையறை குறித்து எம்பிக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசித்திருந்த நிலையில் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.