மழை Twitter
தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும்.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

Rishan Vengai

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.