2 குழந்தைகளுடன் கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு pt desk
தமிழ்நாடு

சேலம்: கணவருடன் குடும்பத் தகராறு - 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு!

வாழப்பாடி அருகே குடும்பத் தகராறு காரணமாக கர்ப்பிணி தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ஆர்.ரவி

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே நெய்யமலை, அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரவி (38). இவருக்கு மாதம்மாள் (30) என்ற மனைவியும், மனோரஞ்சனி (7), நித்யஸ்ரீ (3) என இரண்டு மகள்களும் இருந்தனர். குடும்ப பிரச்னை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

2 குழந்தைகளுடன் கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவனிடம் கோபித்துக் கொண்டு தனது இரு குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் மாதம்மாள். பின் ஒரு வாரத்துக்குப் பிறகு கணவர் வீட்டிற்கே வந்துள்ளார். இதைத் தொடர்ந்து மீண்டும் கணவருடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 23ம் தேதி காலை வேலைக்குச் சென்ற கணவர் ரவி, மாலை வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது அங்கு மனைவியும், இரு குழந்தைககளும் இல்லாததால் அவர்களை தேடியுள்ளார். அப்போது வீட்டுத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் மனைவி, இரு குழந்தைகளும் இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Death

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஏத்தாப்பூர் போலீசார், 3 சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.