ராமதாஸ் முகநூல்
தமிழ்நாடு

”முகுந்தன்தான் மாநில இளைஞரணி தலைவராக நீடிப்பார்”- பாமக நிறுவனர் ராமதாஸ்!

நான் விமர்சிப்பதிற்கு நளினமாகவும் நாகரீகமாகவும் கருணாநிதி பதில் அளிப்பார்

PT WEB

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்,

அதாள பாதாளத்திற்கு சென்று விட்டது தமிழக காவல்துறை!

’தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் அதாள பாதாளத்திற்கு சென்றுவிட்டதே இதற்கு காரணம். முதலமைச்சரின் திறமையின்மையே காரணம் என மக்கள் கூறுவார்கள்.

தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கி விட்டது. பல வழக்குகள் துப்பு துலங்காமல் உள்ளன. வேங்கை வயல் சம்பவம் நடைபெற்று இரு ஆண்டுகள் ஆகியும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அரசு மதுபான கடையில் மதுவிற்கப்பட்டதில் சயனைடு கலந்திருந்த வழக்கில் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கவில்லை.

திசையன்விளை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யபடவில்லை. 14 தனிப்படைகள் அமைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழக காவல் துறை முழுமையாக செயலிழந்துவிட்டது. காவல் துறையின் செயல்பாடுகள் சிதைந்து விட்டது.

அதிகாரிகளை தட்டி கேட்க அதிகாரம் இல்லை!

இதற்கு,காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் உள்துறை செயலாளர் தான் பொறுப்பு. காவல்துறையில் செயல்படாத அதிகாரிகள், தவறு செய்யும் அதிகாரிகளை தட்டி கேட்க அதிகாரிகள் யாரும் இல்லை.

தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக 4829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடையின் கீழ் 4 முதல் 5 சந்து கடைகள் செயல்படுகிறது. இந்த கடைகளில் 24 மணி நேரமும் மதுபான விற்பனை நடைபெறுகிறது. சட்டவிரோதமாக உள்ள கடைகள் யார் நடத்துகிறார்கள் ? என காவல் துறைக்கு நன்றாக தெரியும்.

குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!

சந்து கடைகள் நடத்துபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்திருக்க வேண்டும். ஆனால், அதனை செய்வதில்லை. ஏனெனில் சந்து கடைகள் மூலமாக காவல் துறைக்கு மாமூல் செல்வதால், காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை.

தவறுகளும் தோல்விகளும் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தால் சர்வாதிகாரத்தை தமிழக அரசு கட்டவிழ்த்து விடுகிறது. போராட்டம் நடத்தும் எதிர் கட்சிகள் மீது அடக்குமுறை ஸ்டாலின் அரசு செய்து வருகிறது.

எதிர்கட்சிகள் வாய் மூடி ஜால்ரா தான் ஆளும் கட்சிக்கு போடவேண்டும் என்று நினைக்கிறார்களா?..

திராவிட மாடல் ஆட்சியின் நாட்கள் என்னப்பட்டு வருகின்றன. சட்டப்பேர்வை தேர்தலில் திமுக அரசு படுதோல்வி அடையும். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராடிய செளமியா அன்புமணி கைது செய்யபட்டது கண்டிக்கதக்கது .

அரசு பள்ளிகளை அடகு வைக்கக்கூடாது!

பங்களிப்பு என்ற பெயரில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளில் அடகு வைக்க கூடாது. தமிழகத்தில் 500 அரசு பள்ளிகள் தேர்வு செய்யபட்டு தனியார் பள்ளிகள் பள்ளிகளிக்க உள்ளது. தனியார் பள்ளிகளின் பங்கேற்பினை ஏற்க உள்ளதாக அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது.

தனியார் பள்ளிகளின் முதன்மை நோக்கமே அரசு பள்ளிகளை வீழ்த்த வேண்டும் என்பதுதான். அப்படி..தனியார் பள்ளிகளிடம் உதவி கேட்கும் தமிழக அரசு அடுத்த மருத்துவமனைகள் வளர்ச்சிக்கு மதுபான தொழிற்சாலைகளிடம் உதவி கேட்குமா? தனியார் பள்ளிகளிடம் உதவி கேட்கும் தமிழக அரசின் முடிவை கைவிட வேண்டும்.

முகுந்தன்தான்!

பாமக பொதுக்குழுவில் இளைஞரணி தலைவர் அறிவிப்பதில் ஏற்பட்டதில் கருத்து வேறுபாடு இல்லை. அன்புமணியிடம் பேசி பிரச்னை சரியாகி விட்டது. முகுந்தன்தான் மாநில இளைஞரணி தலைவராக நீடிப்பார். நான் விமர்சிப்பதிற்கு நளினமாகவும் நாகரீகமாகவும் கருணாநிதி பதில் அளிப்பார். “ என ராமதாஸ் கூறியுள்ளார்.