கல்யாண சுந்தரம் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். முகநூல்
தமிழ்நாடு

பதவி பறிப்பு.. திமுக வெளியிட்ட அறிவிப்பு!

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் கல்யாண சுந்தரம் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த எம்.பி கல்யாண சுந்தரத்தை அந்த பதவியில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் சு.கல்யாணசுந்தரம், எம்.பி., அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக திரு. சாக்கோட்டை க.அன்பழகன், எம்.எல்.ஏ., (நாக்கியன் கோவில் மெயின் ரோடு, சாக்கோட்டை அஞ்சல், கும்பகோணம், தஞ்சை மாவட்டம்.) அவர்கள் தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், , தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் கல்யாண சுந்தரம் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இவர் மாநிலங்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவருக்கு பதிலாக எம்.எல்.ஏ சாக்கோட்டை க.அன்பழகன் நியமிக்கப்பட்டிருப்பது தேர்தலுக்கான முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.