விஜயகாந்த் மறைவு - மாரி செல்வராஜ் இரங்கல்
விஜயகாந்த் மறைவு - மாரி செல்வராஜ் இரங்கல் புதிய தலைமுறை
தமிழ்நாடு

RIP Vijayakanth | "பெரிய இழப்பு.. ரொம்ப மிஸ் பண்றேன்" - உருக்கமாக பேசிய மாரி செல்வராஜ்

webteam

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அப்படி இயக்குநர் மாரி செல்வராஜ் தன் இரங்கல் நம்மோடு பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில்,

“விஜயகாந்த் அவர்களை நினைத்தாலே அவரது கட்டுக்கடங்காத துணிச்சல்தான் எனக்கு ஞாபகத்துக்கு வரும். எங்க அம்மாவுக்கு பிடிச்ச ஒரு நடிகர். இப்படி ஒரு ஹீரோ கிடைக்க மாட்டாங்களா என்று ஏங்கியிருக்கேன். நிச்சயமாக அவருடை இழப்பு பெரிய இழப்புதான். கமல் ரஜினி படம் வந்தால் ரசிகர்களிடையே போட்டி இருக்கும். ஆனால் விஜயகாந்த் படம் வந்தால் தங்களது படமாக அதை நினைத்து அனைவரும் செல்வார்கள். கிராமங்களில் உள்ள எல்லோருக்கும் பிடித்த நடிகராக விஜயகாந்த் இருந்தார்.

உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிந்துதான் இருந்தோம். ஆனால் இந்த செய்தியே நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறதென்றால் அவர் நமக்குள் எவ்வளவு பயணமாகி இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்” என்றார். மேலும் தன் X தள பக்கத்தில், “அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன்” என்றுள்ளார் மாரி செல்வராஜ்.