சீமான், கிங்டம், பரிதாபங்கள் முகநூல்
தமிழ்நாடு

”கிங்டம் படத்தை எடுக்கலனா எந்தப் படமும் ஓடாது” - சீமான் பேட்டி!

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க பேரவை சார்பில் நெசவாளர் வாழ்வுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

PT WEB

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளக்கோட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி தொழிற்சங்க பேரவை சார்பில் நெசவாளர் வாழ்வுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளார். தமிழ்நாட்டில் திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிக அளவு ஜவுளி பொருட்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் வேளாண் பொருட்களை இறக்குமதி செய்ய மாட்டோம் என கூறியுள்ளார். இதில் இந்தியாவின் நிலைப்பாடு சரிதானா.. என செய்தியாளர்கள் கேட்டதற்கு,

ஜவுளி தொழில் கைத்தறி நெசவு என நெசவுத்தொழில் முற்றிலும் நசிவடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த வரி ஏற்றத்தினால் ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் ஆடை உற்பத்தி பெரிய அளவில் வீழ்ச்சி அடையும். அதேபோல, ஒவ்வொரு மாநிலத்திலும் பிரச்சனைகள் உண்டு நாடு எவ்வளவு பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்பதை பாருங்கள். தற்சார்பு என்பதை யாரும் பொருட்ப்படுத்தவில்லை, முழுக்க முழுக்க ஒரு நாட்டை சார்ந்து இருப்பது பேராபத்தில் கொண்டு போய் நிறுத்தி விடும். ”நமக்கான முடிவை அவர் எடுக்கிறார். ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கக்கூடாது என்கிறார். இது பேராபத்தான போக்கு இது எங்கு கொண்டு போய் நிறுத்தும் என தெரியவில்லை. இதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என கூறினார்.

trump, modi, putin

டெல்லியில் தமிழக பெண் எம்பியிடம் செயின் பறிப்பு சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,

ராணுவ வீரர்களுக்கும் காவல்துறையினருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்து வருகிறது. புல்வாமா தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் தான் அது போல் தான் இது ”திருடனுக்கு தலைநகர் என்ன புறநகர் என்ன எல்லாம் ஒன்றுதான். நாட்டில் பாதுகாப்பாற்ற சூழல் உள்ளது. ஒரு நாடே நவீன தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு கருவிகள் பொருத்தி கண்காணிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது”. இதுபோன்ற குற்றங்கள் கடும் தண்டனை கொடுத்து தடுக்கப்பட வேண்டும். குற்ற சம்பவங்கள் சாதாரணமாக நடக்கிறது. நாடே ஒரு குற்ற நாடாக மாறிவிட்டது என்பதை நாம் ஒப்புக்கொள்ள தான் வேண்டும் எ‌ன பேசினார்.

நெல்லையில் கவின் கொலை செய்யப்பட்டது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றே வந்துள்ளது. அதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,

சொசைட்டி பரிதாபங்கள்

அவர்கள் சரியாக தானே பண்ணியிருக்கிறார்கள். இதில் எச்சரிக்க என்ன இருக்கிறது, எதன் பொருட்டும் கொலையை ஏற்க முடியாது. ’’தமிழனுக்கு சாதி இல்லை சாதி தமிழனுக்கு இல்லை தமிழன் என்பதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று கிடையாது உயர் ஜாதி என்று சொன்னாலே அவன் சிறந்தவன் ஆகிவிடுவானா. உயர்வு தாழ்வை பிறப்பில் பார்க்கக் கூடாது அவருடைய செயல்பாட்டில் தான் பார்க்க வேண்டும்”. காதலையும் அன்பையும் கொலை செய்ய வேண்டும் என்ற சிந்தனை தான் தாழ்ந்த சிந்தனை ‌ அதுதான் தாழ்ந்த ஜாதி. இந்த உலகில் அன்பைத் தவிர எதுவும் மிச்சம் இல்லை. சாதிக்காக கொலை செய்யாதே ஜாதியை கொலை செய்.‌ சாதிக்க நினைத்த இளைஞனை இந்த சமூகம் கொன்றுவிட்டது. ”பாரிதாபங்கள் சரியாக தானே சொல்லி இருக்கிறார்கள் அதற்கு கண்டனம் தெரிவிப்பது சாதிய ஆதிக்கம் தானே” அதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என பேசினார்.

கிங்டம்

கிங்டம் படம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,

தமிழர்களை இழிவுபடுத்தி கிங்டம் படம் வெளியாகி உள்ளது. அதை வெளியிட்டது யார் இனத்தை விட பணம் பெரிதாகி விட்டதா. தமிழர்கள் இலங்கையில் போதைப் பொருள் தான் கடத்தினார்களா? சிங்களர்கள் எதுவும் செய்யவில்லையா கேட்க நாதி இல்லை என்றால் எதையும் செய்யலாம் தமிழர்களை இழிவு படுத்தி தமிழர்களிடமே வியாபாரம் செய்யலாமா ”நான் தொடர்ச்சியாக நிகழ்ச்சியில் இருந்ததால் படத்தை ஒட்டிவிட்டாய் இன்னும் இரண்டு நாட்களில் அந்த படத்தை எடுக்கவில்லை என்றால் ஒரு தியேட்டரில் கூட எந்த படமும் ஓடாது” என பேசினார்.