மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர்
மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர்புதிய தலைமுறை

”11ம்வகுப்பு பொதுத்தேர்வு ரத்து” மாநில கல்விக் கொள்கையை வெளிட்டார் முதல்வர்! முக்கிய அம்சங்கள் என்ன?

பள்ளிக் கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 8 ) வெளியிட்டார்.
Published on

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வரும்நிலையில், இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்தக் கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்டறிந்து கல்விக் கொள்கையை வடிவமைத்தனர்.

அதன்படி, சுமார் 650 பக்கங்கள் கொண்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 2023 அக்டோபரில் தயாரானநிலையில், வரைவு அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் 2024 ஜூலை 1-ஆம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர்.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 8 ) வெளியிட்டார்.

Attachment
PDF
மாநில பள்ளி கல்விக் கொள்ளை
Preview

மாநில கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்:

  1. 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது.

  2. தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையையே கடைபிடிக்க வேண்டும்.

  3. நீட் தேர்வு இருக்கக்கூடாது;

  4. கல்வி மாநில பட்டியலில் வர வேண்டும் .

  5. தொடக்க நிலை முதல் பல்கலைக்கழக நிலை வரை தமிழ் வழிக் கல்வியை வழங்குதல்

  6. 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

    உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கொண்ட மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

இதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் , “புதிய உற்சாகம் பிறக்கிறது. பள்ளி மாணவர்கள், இளைஞர்களை பார்த்தாலே புதிய உற்சாகம் பிறந்து விடுகிறது; மாணவர்களை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கல்வியின் முக்கியத்துவத்தை கூறி வருகிறேன். எக்காரணம் கொண்டும் யாரும் கல்வியை பாதியில் கைவிடக்கூடாது; அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம் .” என்று தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து பேசுகையில், “ அன்று குலக்கல்வியை எதிர்த்தார் பெரியார்; இன்று தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறார் முதல்வர் ஸ்டாலின். கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவரும் முன்னெடுப்பாக இது அமைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com