பெண் விபரீத முடிவு pt desk
தமிழ்நாடு

காஞ்சிபுரம் | செல்போன் செயலி மூலம் கடன் வாங்கிய பெண் விபரீத முடிவு

மணிமங்கலம் அருகே செல்போன் செயலி மூலம் கடன் பெற்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோக்தை ஏற்படுத்தியுள்ளது. ;

PT WEB

செய்தியாளர்: கோகுல்

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே வரதராஜபுரம் பி.டி.சி குடியிருப்பில் வசிப்பவர் நடராஜன். தனியார் ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி இவருக்கு புனிதா (39) என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர்கள், வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியதில் இவர்களுக்கு அதிக கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடனை அடைக்க செல்போனில் உள்ள ஆன்லைன் ஆப் மூலம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் கடன் வங்கியதாக தெரிய வருகிறது.

இந்நிலையில், கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், மன உளைச்சலில் இருந்த புனதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.