heavy rain pt desk
தமிழ்நாடு

24 மணி நேரத்தில் புயலாக மாறும்.. தமிழகத்தில் டிச. 3, 4ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு

டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் தமிழகத்தில் கன முதல் மிக கனமழையும், 4ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

webteam

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது சென்னைக்கு தென்கிழக்கில் 800 கிலோமீட்டர் தொலைவிலும் புதுச்சேரிக்கு தெற்கு தென் கிழக்கே 790 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாகவும் அடுத்த 3 நாட்களில் இது வடக்கு வடமேற்கு பகுதியில் நகர்ந்து சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 5ஆம் தேதி மாலை புயலாக கரையை கடக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain model image

இதன் காரணமாக, டிசம்பர் 3ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் குறித்தும் வானிலை மையம் கணித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

இதனிடையே, வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது வடமேற்கு திசையில் 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது;

சென்னையில் இருந்து 510 கிலோ மீட்டர் தொலைவில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு