செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி புதிய தலைமுறை
தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்த்திறப்பு விநாடிக்கு ஆயிரம் கன அடியாக குறைப்பு

PT WEB

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்த்திறப்பு விநாடிக்கு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் தற்போது 22.64 அடி அளவிற்கு நீர் நிரம்பியுள்ளது.

கடல்போல் காட்சியளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்த்திறப்பு விநாடிக்கு ஆயிரத்து 500 கனஅடியில் இருந்து ஆயிரம் கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு ஆயிரம் கன அடியாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.