தமிழ்நாட்டை பொருத்தவரையில் மாநிலத்தின் கடன் கட்டுக்குள் உள்ளது என்று இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு மீதான மாநில நிதி தணிக்கை அறிக்கையை இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை வெளியிட்டது. 2022-2023 வரையிலான கணக்கு தணிக்கை முடிவுகளை முதன்மை கணக்காய்வுத் தலைவர் ஜெய்சங்கர் மற்றும் முதன்மை கணக்காய்வு தலைவர் கே.பி.ஆனந்த் ஆகியோர் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர் சந்திப்பின்போது வெளியிட்டனர்.
இதன்படி, 2021-2022ல் 46,538 கோடி கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை 2022-2023 - ல் 36,215 கோடியாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் வருவாய் வரவுகளை விட இவ்வாண்டின் வரவுகள் 17% அதிகரிப்பதே இதற்கு காரணம் .
மாநிலத்தின் தனிநபர் GSDP தேசிய சராசரியை விட கிட்டத்தட்ட 56% அதிகமாக இருந்தது. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மொத்த கடன் 21,980 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2017க்கு முன்பாக 6,467 கோடி ரூபாயாக இருந்த கடன் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மாநில போக்குவரத்து கழகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான சுகாதார நல்வாழ்வுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 69 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.