நெதர்லாந்து இளைஞரை கரம்பிடித்த கோவை பெண் pt desk
தமிழ்நாடு

'அம்மி மிதித்து... அருந்ததி பார்த்து..' நெதர்லாந்து இளைஞரை கரம்பிடித்த கோவை பெண்!

5 ஆண்டுகளாக காதலித்து நெதர்லாந்து நாட்டு இளைஞரை கரம் பிடித்த தமிழ் பெண்ணுக்கு கோவையில் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

PT WEB

செய்தியாளர்: பிரவீண்

கோவை, மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமலதா, இவர், நெதர்லாந்து நாட்டில் உள்ள நிஜ்வேர்டால் என்ற பகுதியில் ஐ.டி நிறுவனத்தில் நிர்வாகம் மேலாளராக பணியாற்றி வந்தார்.

நெதர்லாந்து இளைஞரை கரம்பிடித்த கோவை பெண்

அப்போது நெதர்லாந்து நாட்டில் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வந்த ரமோன் ஸ்டீன்ஹீஸ் என்பவருடன் காதல் மலர்ந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் கோவை இடிகரை அருகே தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்து முறைப்படி அக்னி சாட்சியாக அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து நடைபெற்ற இந்த திருமணத்தில் நெதர்லாந்து நாட்டில் இருந்து வந்திருந்த ரமோன் ஸ்டீன்ஹீஸ் பெற்றோர்கள் மற்றும் அவரது நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் தமிழ் பாரம்பரிய வேட்டி மற்றும் சேலைகளை அணிந்தபடி திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.