work from Home facebook
இந்தியா

ஆந்திரா|பெண்களுக்கு ’work from Home’ திட்டம் !

பெண்களுக்கு ’ work from Home ’ திட்டத்தை செயல்படுத்தவுள்ளது ஆந்திர அரசு.

ஜெனிட்டா ரோஸ்லின்

பெண்களின் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தவும் வேலை - வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும் ’ work from home ’ என்ற திட்டத்தை செயல்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது ஆந்திர அரசு.

90 மணி நேரம் வேலை குறித்தான கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தநிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பெண்களுக்கென பிரத்யேக திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

பெண்களின் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தவும் வேலை - வாழ்க்கை சமநிலையை மேம்படுத்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (Information Technology (IT) and Global Capability Centers policy ) 4.0 என்பதன் ஒருபகுதியாக இந்த நடவடிக்கையானது அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு “ வீட்டிலிருந்தே வேலை” என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு,

” இன்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கான சர்வதேச தினம். இந்தத் துறைகளில் பெண்களின் சாதனைகளைப் பாராட்டுகிறோம். அவர்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்குவதற்கு ஆந்திரா முனைப்பாக உள்ளது.” என்று பதிவிட்டுள்ள அவர்,

பெண்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில் , ஒவ்வொரு மாநகரம் , நகரம், மண்டலத்தில் coworking space எனப்படும் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐடி அலுவலகங்கள் அமைக்கவும், கிராமப்புரங்களில் வேலைவாய்ப்புகலை உருவாக்கவும் ஐடி நிறுவனங்களுக்கு ஊக்குவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.