தென்காசி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் குற்றாலம் அருவியில் நீர் காட்டாற்று வெள்ளமாக பெருகியுள்ளது.
தென்காசி, சங்கரன்கோயில், செங்கோட்டை பகுதிகளில் கனமழை தென்காசி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் கனமழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலையில் ஏற்றப்பட்டது பரணி தீபம். இன்று மாலை நடைபெற உள்ள மகாதீப நிகழ்வுக்காக விரிவான ஏற்பாடுகள் நடைப்பெற்றுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல். திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிப்பு.
கனமழை காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால், சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக நெல்லை, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தென்காசி, தூத்துக்குடி மற்றும் விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக மழை.
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தின்போது லிப்டுக்குள் சிக்கிக்கொண்ட 7 பேர் உயிரிழப்பு. கவலைக்கிடமான நிலையில் ஒருவருக்கு சிகிச்சை.
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்றார் தமிழக வீரர் குகேஷ். சீன வீரர் டிங் லீரெனை வீழ்த்தி அபாரம்.
மிக இளம் வயதில் செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த குகேஷ் ஆனந்த கண்ணீர் சிந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தொய்வடையும் போதெல்லாம் கோடிக்கணக்கான இந்தியர்களை நினைத்துக் கொள்வேன் என சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் நெகிழ்ச்சி.
கடின உழைப்பு, ஒப்பற்ற திறமைக்கு கிடைத்த வெற்றி என குகேஷ்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து. குகேஷை எண்ணி தமிழகம் பெருமை கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு.
விசிக கொடிகம்ப விவகாரத்தில் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட மூவரின் பணி இடைநீக்க நடவடிக்கை ரத்து.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல். மாநிலங்களின் குரல்களை அழித்து கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் என்று கூறி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு.
மத வழிபாட்டு தலங்கள் தொடர்பாக புதிய வழக்குகளை விசாரணைக்கு ஏற்க நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை. ஏற்கனவே விசாரணையில் உள்ள வழக்குகளில் உத்தரவுகளை பிறப்பிக்கவும் தடை விதிப்பு.