அசாமில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 9 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
அசாமின் டிமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். உடனடியாக நிகழ்விடத்துக்கு சென்ற மாநில மீட்புப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுரங்கத்தில் 9 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக எக்ஸ் பக்கத்தில் தெரிவித்த முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்களின் பெயர்களையும் வெளியிட்டார்.
ராணுவத்தின் உதவியை நாடியுள்ளதாக கூறியுள்ள முதலமைச்சர் தேசிய மீட்பு படையும் மீட்பு பணியில் இணைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.