புயல் Reuters
இந்தியா

2026 இறுதிக்குள் 3 கடுமையான புயல்கள் உருவாக வாய்ப்பு: இஸ்ரோ அதிர்ச்சி எச்சரிக்கை!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஆய்வு தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் 3 தீவிர புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடற்பகுதிகளில் தீவிர வானிலை மாற்றம் குறித்து ஒரு முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் மூன்று தீவிர புயல் சூறாவளிகள் உருவாகக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ISRO

இந்த முறை உருவாகும் புயல்களின் வேகம் மற்றும் தாக்கம் கடந்த 44 ஆண்டுகளின் சராசரியை விட மிகவும் வலுவானதாக இருக்கக்கூடும் என இஸ்ரோவின் செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் வானிலை ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. புயல்களின் தீவிரத்தன்மை மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதம், காற்றின் வேகம் ஆகியவற்றைக் கணக்கிடும் முறையின்படி, இந்த ஆண்டு தாக்கும் புயல்கள் அதிக அழிவை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளதால் கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநில அரசுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.