இந்தியா

உத்தரப் பிரேதசம்: இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை

JustinDurai
குற்றவாளிகள் மீது போலீசார் துரித கதியில் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளம்பெண் குற்றஞ்சாட்டி உள்ளார்.
டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 13-ஆம் தேதி, உத்தரப் பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதிக்கு வந்திருந்தார். திருமண நிகழ்ச்சி முடிந்து டெல்லி செல்வதற்காக மறுநாள் அங்கிருந்த பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அவ்வழியாக காரில் வந்த 3 நபர்கள், பிஜ்னோர் நகரப்பகுதியில் இறக்கி விடுவதாக நம்ப வைத்து, அந்த இளம்பெண்ணை காரில் ஏற்றியுள்ளனர். அப்போது மூவரும் கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வழியிலேயே இறக்கிவிட்டனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், நாங்கல் சோதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழித்ததாகவும், முன்னாள் எம்.பி. பரந்தேந்து சிங் இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகே குற்றவாளிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குற்றவாளிகள் மீது போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டினார்.